(லங்காஈநியூஸ்- 2019. பெப்ரவரி.20 பி.ப,07.55) அரசியல் யாப்பு சபை என்பது நாட்டினுடைய அரச இயந்திரங்கள் அரசியல் மயமாக்கப்படுவதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட பிரதானமான அங்கமாகும். முதலில் தயாரிக்கப்பட்டது மூன்று அரசியல்வாதிகள் மற்றும் 7 சுயாதீன உறுப்பினர்கள் கொண்ட சபையாகும். எனினும் வாசுதேவ, வீரவன்ச போன்றோரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த யாப்பு சபையானது 7 அரசியல்வாதிகள் மற்றும் மூன்று சுயாதீன நபர்கள் அடங்கியதாக மாற்றம் செய்யப்பட்டது. 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய குறித்த யாப்பு சபை அமைக்கப்பட்டது. அதனுடைய திருத்தத்தை ஜனாதிபதி சிறிசேனவே பாராளுமன்றில் முன்வைத்தார். அதற்கு தேவையான மேலதிக திருத்தங்களை அப்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கொண்டுவந்தார். மஹிந்த ராஜபக்சவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்த பாராளுமன்றில் இந்த திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. 223 வாக்குகள் சார்பாக அளிக்கப்பட்டதுடன் இருவரது வாக்குகள் மாத்திரமே கிடைக்கப்பெறவில்லை.
ஆனால் இன்று அரசியல் யாப்பு சபைக்கு எதிராக இவர்கள் ஆயுதம் தூக்கி உள்ளனர். அரசியல் யாப்பு சபை கொண்டுவந்த சிறிசேனவும் அதில் திருத்தங்களை மேற்கொண்ட விஜேதாஸவும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருந்தும் குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த மஹிந்த ராஜபக்சவுமே இவ்வாறு ஆயுதம் தூக்கி எதிர்ப்பு வெளியிடுகின்றனர்.
இவர்களுக்கு திடீரென அரசியல் யாப்பு சபை அஜீரணம் ஆனது ஏனோ? அது வேறு எந்த காரணத்திற்காகவும் அல்ல. தனக்கு விருப்பமான ஊழல் வாய்ந்த நீதிபதி தீபாலி விஜேசுந்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து பின்னர் அவரை பிரதம நீதியரசராக நியமிக்கும் திட்டத்திற்கு அரசியல் யாப்பு சபை அங்கீகாரம் வழங்காமல் இருப்பதே காரணமாகும். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி தீபாலி விஜேசுந்தர சிரேஸ்ட நிலையில் உள்ளதாக சிறிசேன கூறி வருகிறார். ஆனால் உண்மை நிலை அதுவல்ல. தீபாலி என்பவர் அரசியல்வாதிகளுக்கு தேவையானது போல வழக்கு தீர்ப்பு வழங்குவதில் பிரபலமானவர். எனவே இவ்வாறான ஒருவரை பயன்படுத்தி தனக்கு தேவையான வழக்குத் தீர்ப்புக்களை எழுதிக் கொள்வது சிறிசேனவின் தேவையாகும். மற்றும் ஒரு பக்கத்தில் சிரேஷ்ட நிலையை மாத்திரமே கொண்டு தலைமை நீதிபதி நியமிப்பதில் பொருத்தம் இல்லை. நியமிக்கப்படும் நபரின் ஒழுக்கம் மற்றும் கடந்தகால செயற்பாடுகள் பொருத்தமானதாக அமையும் என அரசியல் யாப்பு சபையின் தலைவரான சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்திருந்தார். நீதிபதிகளை சிரேஷ்ட நிலையின் அடிப்படையில் மாத்திரம் தெரிவு செய்வதாயின் அரசியல் யாப்பு சபை எதற்கு? நேரடியாகவே சிரேஷ்ட நிலையைக் கொண்ட நபரை குறித்த பதவிக்கு தெரிவு செய்ய முடியும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
சிறிசேன, விஜயதாச, மஹிந்த போன்றவர்களின் ஆதரவில் செயல்பட்டு வரும் தீபாலி என்ற நபர் எந்த வகையான வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது லங்கா ஈ நியூஸ் இணையத்தின் பொறுப்பாகும். நீதிபதிகளின் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்துவது நீதிமன்றத்திற்கு செய்யும் அவமரியாதை என நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒழுக்கமான சமூகம் ஒன்றில் அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. எனவே அதனை செய்தியாக்குவது லங்கா ஈநியூஸ் இணையத்திற்கு மாத்திரமே உள்ள கடமையாகும் என்பதால் நாம் எமது கடமையை செய்கிறோம்.
தீபாலி விஜேசுந்தர கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் நீதவானாக தனது நீதித்துறை கடமைகளை ஆரம்பித்தார். ஒருமுறை வழக்கு விசாரணை ஒன்றில் அரச தரப்பு சாட்சியாக இருந்த அரசின் உயர்நிலை பதவி கொண்ட அதிகாரி ஒருவருக்கு வழக்கில் ஆஜராக முடியாது போனதன் காரணமாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அவர் சந்தேகநபர் அல்ல அரசு தரப்பு சாட்சியாளர் ஆவார். அவரது பெயர் தர்மதிலக. அவரை பொலிஸார் கைது செய்தனர். பிடியாணை பிறப்பிக்கப்பட்டதால் பொலிசார் அவருக்கு கருணை காட்டி நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். அது ஒரு வெள்ளிக்கிழமை நாள் மாலை நேரமாகும். நீதவானாக தீபாலி விஜேசுந்தர செயல்பட்டார். அவர் சந்தேகநபர்களை உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து வருவதை ஒருபோதும் விரும்பாதவர். அந்த தருணத்தில் தர்மதிலக என்ற பெண் போலீசாரின் ஜீப் வண்டியில் அமர்ந்து தனது குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தார். நீதவான் தீபாலி அதனை பெரிதுபடுத்தவில்லை. காரணம் அவர் குற்ற வழக்கில் சந்தேக நபர் இல்லை அரசதரப்பின் சாட்சியாளர் என்பதால். எனினும் ஆஜர் செய்யப்பட்டவர் யார் என்பதை கணக்கில் எடுக்காத தீபாலி விஜேசுந்தர அரச தரப்பு சாட்சியாளரை இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். நீதவான் அல்லது நீதிபதி ஒருவர் தனக்கு முன்னால் கூண்டில் நிறுத்தப்படும் நபர் உயிருள்ள மனிதரா அல்லது பிணமா என்பதை முதலில் ஆராய வேண்டும். நபர் ஒருவரை நேரடியாக பார்த்து தீர்ப்பினை அறிவிக்க வேண்டும். அது அவசியம் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். தீபாலி அவ்வாறின்றி சந்தேகநபரை பார்க்காமலே விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டு நீதவான் ஒருவரின் பொறுப்பினை மீறி செயற்பட்டார்.
பின்னர் தர்மதிலக என்ற பெண் விளக்கமறியலில் இருந்த போது அவருக்கு நன்கு பழக்கமான அரசு மற்றும் ஒரு உயர் நிலை உத்தியோகஸ்தர் நடந்தவை குறித்து கவலை அடைந்து மோசம் ஒன்றை தாக்கல் செய்து தர்மதிலகவை விளக்கமறியலில் இருந்து வெளியில் எடுத்தார். அதுமாத்திரமன்றி தீபாலி விஜேசுந்தரவிற்கு எதிராக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். தர்மதிலக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் சார்பில் இலவசமாக வாதாடுவதற்கு நாட்டின் பிரபல சட்டத்தரணிகளுள் ஒருவரான கொல்வின் ஆர் டி சில்வா முன்வந்தார். 1986ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு தர்மதிலகவிற்கு சாதகமாக அமைந்தது. குறித்த வழக்கை விசாரித்தது அப்போதைய பிரதம நீதியரசர் சர்வானந்தா, செனவிரத்ன மற்றும் தம்பையா போன்ற மூன்று நீதியரசர்கள் கொண்ட குழுவாகும். அதன்போது தீபாலியின் செயல்பாட்டிற்கு மூன்று நீதியரசர்களும் கடும் எச்சரிக்கை விடுத்ததுடன் தர்மதிலக என்ற பெண் கூறிய நிவாரணத்தை வழங்கியதுடன் தீபாலி விஜேசுந்தர தொடர்பில் நீதி சேவை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்தனர். அதனால் தீபாலியின் பதவி உயர்வுகள் சிலகாலம் தடுத்து வைக்கப்பட்டன.
அது தீபாலி விஜேசுந்தர என்ற புதுமையான நீதவான் தனது நீதித்துறையை ஆரம்பித்த விதம் ஆகும்.
பிற்காலத்தில் தீபாலி விஜேசுந்தர கண்டி நீதிமன்ற வளாகத்திற்கு மாற்றப்பட்டார். அதன்போது அவர் வழக்கு தீர்ப்புகளில் டீல் வைத்துக்கொண்டமை 'ஈஷா' என்ற முஸ்லிம் சட்டத்தரணி ஊடாகவாகும். சிலகாலம் சென்ற போது ஈஷாவுடன் தீபாலி கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்ள ஆரம்பித்தார். அப்போது தீபாலிக்கும் ஈஷாவிற்கும் திருமணமாகி குடும்ப வாழ்க்கை முறை காணப்பட்டது. பிள்ளைகளும் இருந்தனர். இது தொடர்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தீபாலியின் தந்தைக்கும் ஈஷாவின் தந்தைக்கும் தகவல் வழங்கி எச்சரித்தார். எனினும் தங்களது கள்ளத்தொடர்பை தீபாலியும் ஈஷாவும் முடித்துக் கொள்ளவில்லை.
அவர்கள் சந்திப்பதற்கு தொடர்ந்து பயன்படுத்திய இரகசிய இடம்தான் கண்டி கெட்டம்பே விகாரைக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகும். ஒருநாள் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த ஈஷாவின் தந்தை தீபாலியை கையும் களவுமாகப் பிடித்து கொண்டார். அதன்போது ஈசாவின் தந்தை தீபாலியை ஒரு நீதவான் என்று கூட பாராமல் கன்னத்தில் அடித்து 'நீ ஒரு தாசி, நீ மற்றவரின் குடும்பத்தை கெடுத்து வாழாமல் ஓடிப்போ' என்று கெட்டவார்த்தைகளால் திட்டி மிரட்டி விரட்டியடித்துள்ளார். இந்த சம்பவத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தை சுற்றியிருந்த அனைவரும் கண்டு கொண்டனர். அத்தோடு தீபாலி- ஈஷாவின் கள்ளத்தொடர்பு நிறுத்தப்பட்டதோடு தீபாலியும் வேறு ஒரு இடத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றுவிட்டார்.
தீபாலி நீதிமன்றின் ஒழுக்கத்தை பாதுகாத்தது இவ்வாறு ஆகும்
தீபாலி விஜேசுந்தர மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது அவருடைய மகளின் திருமண வைபவத்திற்கு சாட்சி கையெழுத்திடுவதற்கு அழைப்பு விடுத்தது அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்சவிற்காகும். (அது நீதிபதிகளின் ஒழுக்க விதிகளை மீறிய செயலாகும்) மகிந்த ராஜபக்ச தீபாலியை 'சின்னத் தங்கை' என்றே அழைப்பார். திருமணத்திற்கு சாட்சி கையெழுத்திட்ட பின்னர் மஹிந்த ராஜபக்ச 10 லட்சம் ரூபாய் காசோலை ஒன்றை திருமண தம்பதியினருக்கு பரிசளித்தார். திருமணம் முடிந்தபின் புத்தம் புதிதாக பதிவு செய்யப்படாத பென்ஸ் கார் ஒன்றை பரிசாக தீபாலியின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். குறித்த காரை ஓட்டிச் சென்றது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய கமாண்டோ பிரிவின் கெப்டன் ஒருவராவார். இவை லஞ்சம் பெறுவது அன்றி வேறு என்ன? இந்த லஞ்சம் வழங்கப்பட்டமைக்கு காரணம் சரத் பொன்சேகாவின் வெள்ளைக்கொடி வழக்கு விசாரணையில் தீபாலி வழங்கிய மற்றுமொரு தீர்ப்பினால் ஆகும். வெள்ளைக்கொடி விவகார வழக்கு இறுதியில் மற்றுமொரு ஊழல்வாத நீதிபதியுடன் இணைந்து பொன்சேகாவை குற்றவாளியாக அறிவித்து தீர்ப்பளித்தனர். நீதிபதி வராவெவ மாத்திரமே சரத் பொன்சேகாவை குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தார். வெள்ளைக்கொடி வழக்கு தீர்ப்பின் பின்னர் தீபாலிக்கு மேலும் உயர்நிலை மற்றும் தகுதிக்கு அப்பால் 7 நீதிபதிகளை பின்தள்ளி மஹிந்த ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார்.
தீபாலி மேன்முறையீட்டு நீதிமன்றில் சிரேஷ்ட நிலையில் உள்ளமை இவ்வாறான பின்னணியில் ஆகும்.ஈ
மஹிந்த ராஜபக்சவின் நீதிமன்ற தலையீட்டை உலகிற்கே ஒப்புவித்த தீர்ப்புகளில் 'சின்னத் தங்கை' தீபாலி விஜேசுந்தர என்ற ராஜபக்ச பினாமி வழங்கிய தீர்ப்பு விளங்குகிறது. அது ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பாகும். அவர் எழுதிய கட்டுரை தீவிரவாதத்திற்கு ஊக்கமளிப்பதாக குறிப்பிட்டு தீபாலி விஜேசுந்தர திஸ்ஸ நாயகத்திற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார். அவருக்கு எதிராக எவ்வித சாட்சியங்களும் இல்லாமலே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது. திஸ்ஸநாயகம் தீவிரவாத ஒழிப்பு பிரிவில் இருந்த போது தீவிரவாத ஒழிப்பு பிரிவினர் திஸ்ஸநாயகம் வழங்கிய வாக்கு மூலம் சிங்கள மொழியில் எழுதப்பட்டது. அவர் தமிழ் மொழியிலேயே தனது வாக்குமூலத்தை அளித்திருந்தார். இந்த வழக்கு தீர்ப்புக்கு எதிராக முழு உலகமும் குரல் எழுப்பியதுடன் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார். இறுதியில் மஹிந்த ராஜபக்ச தனது அரசாங்கத்தின் கௌரவத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக திஸ்ஸநாயகத்துக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளித்தார். திஸ்ஸநாயகம் அதன் பின்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.
தீபாவளி தனது முதலாளியின் கோரிக்கையை நிறைவேற்ற சென்று முழு நாட்டையும் கேள்விக்கு உட்படுத்திய சந்தர்ப்பம்..
தீபாலி விஜேசுந்தர என்பவர் கடுமையான இனவாதி ஆவார். அவருக்கு முன்னால் வரும் அனைத்து தமிழர்களும் விடுதலைப் புலிகளாவர். யுத்தகாலத்தில் தீபாலி தமிழ் மக்கள் பலரை சிறையில் அடைத்தார். சிறையில் அடைத்து பல கதைகளையும் கூறினார். திஸ்ஸநாயகம் வழக்கு தீர்ப்பு மாத்திரமன்றி ரவிராஜ் கொலை சந்தேக நபர்களை விடுதலை செய்து வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ரவிராஜ் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட எதிர் மனுவையும் ஒரே நாளில் நிராகரித்து வழங்கிய தீர்ப்பு புதுமையானவை. ரவிராஜின் மனைவி பிள்ளைகளுடன் வெளிநாட்டில் இருந்தார். அதனால் முறைப்பாட்டாளர் தரப்பில் நீதிமன்றில் ஆஜராகவில்லை என மனு நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு மனு நிராகரிக்கப்பட்ட நாடு இலங்கை தவிர வேறு எங்கும் இல்லை. ஆனால் தீபாலிக்கு அவை பெரிதில்லை. ரவிராஜின் உறவினர்கள் வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பளிக்கப்படவில்லை.
தீபாலி தனது கடமையைச் செய்தமை இவ்வாறு ஆகும்
தீபாலி விஜேசுந்தர மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு தகுதியற்றவர் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பிரதானமான காரணம் குறித்த பதவி வழக்கு விசாரணை மாற்றம் செய்து செல்வதல்ல. அதற்கு மேலாக சிறந்த நிர்வாகத்துடன் கூடிய பதவி ஆகும். சிறந்த நிர்வாகத்திற்கு ஒரு உதாரணம் இதோ,
தீபாலிக்கு முன்னர் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக பத்மன் சூரசேன செயல்பட்டார். அவர் திலீப் நவாஸ் என்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரை வழக்கு விசாரணையில் இருந்து அகற்றினார். அதற்கு காரணம் திலீப் நவாஸ் தான் வழங்கிய தீர்ப்பினை முழுமையாக எழுதி முடிக்காமல் வைத்திருந்தமையாகும். அதாவது கடமையை தவறியமையாகும். நாளாந்தம் தீர்ப்பினை பகிரங்க நீதிமன்றில் வாய்மூலமாக அறிவித்த போதும் அதனை எழுத்து மூலம் எழுதியிருக்கவில்லை. இவ்வாறான வழக்கு தீர்ப்பு ஒன்றுக்கு எதிராக நீதிமன்றில் மேன்முறையீடு செய்ய முடியாதுஎனவே அவரும் மடவல என்ற நீதிபதியும் சேர்ந்து வழங்கிய வழக்கு தீர்ப்பு எழுத்து வடிவில் காணப்படவில்லை தற்போது அவை எழுதப்படும் பெறுவது பிரச்சினை. காரணம் அவர் தற்போது உயிருடன் இல்லை.
அதன்படி பத்மன் சூரசேன தலைவராக இருந்தபோது திலீப் நவாஸ் நீதிபதியை வழக்கு விசாரணையில் இருந்து அகற்றி இருந்தார். எனினும் தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதிபதியாக தீபாலி விஜேசுந்தர நியமிக்கப்பட்டதுடன் நவாஸ் என்ற நீதிபதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தெளிவாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நிர்வாக குறைபாட்டினை தீர்த்துக்கொள்ள முடியாமல் போயுள்ளது. தீபாலி நீதிமன்றில் இவ்வாறுதான் செய்கிறார்.
இவை உள்ளிட்ட மேலும் பல காரணங்களினால் முன்னாள் பிரதம நீதியரசர் மற்றும் தற்போதைய பிரதம நீதியரசர் நளின் பெரேரா போன்றவர்கள் தீபாலி விஜேசுந்தர மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு பொருத்தமானவர் என பரிந்துரை செய்யவில்லை அரசியல் யாப்பு சபை மீண்டும் மீண்டும் தீபாவளியை நிராகரித்து வருகிறது.
அரசியல் யாப்பு சபை உடைத்தெறிந்துமேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாத்திரமன்றி அதன் பின்னர் பிரதம நீதியரசராக தீபாலி விஜேசுந்தர வை நியமிக்க வழிசமைக்கும் சிறிசேன விஜயதாச மற்றும் மகிழ்ந்து போன்றவர்களின் செயற்பாடுகளை சட்டம் அறிந்த வல்லுனர்கள் நாட்டு மக்கள் பிரச்சனைக்கு உட்படுத்துவது காரணம் உள்ள விடயமாகும்.
---------------------------
by (2019-02-20 21:07:24)
Leave a Reply